20ஐ நிறைவேற்ற, எதிர்கட்சியைச் சேர்ந்த 09 பேர் ஆதரவு
அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது, அதனை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 09 பேர் ஆதரிக்கவுள்ளனர் என, அரசாங்கப் பத்திகையான ‘சன்டே ஒப்சர்வர்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு தரப்பைச் சேர்ந்த ஒன்பது – எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக, அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவருக்கு உறுதியளித்துள்ளனர் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 வது திருத்தத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்கு, குறைந்தபட்சம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவரின் ஆதரவு அரசாங்கத்துக்குத் தேவையாகவுள்ளது.