30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக ஐ.நா.வில் அமைச்சர் தினேஷ் அறிவித்தார்

🕔 February 26, 2020

க்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக இலங்கை அறிவித்துள்ளது.

ஜெனிவாவில் இடம்பெறும் கூட்டத்தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இதனை உத்தியோகபூர்வமாக இன்று புதன்கிழமை அறிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“கடந்த அரசாங்கம் அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும் மீறியது. இந்த விடயம் குறித்து அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்படவில்லை, நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை, முன்னாள் ஜனாதிபதியிடமும் இந்த விடயம் ஆலோசிக்கப்படவில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“எனவே கடந்த அரசாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானம் 40/1 மற்றும் 30/1 மற்றும் 34/1 இல் இருந்து முறையாக விலக நாம் தீர்மானித்துள்ளோம் இது நடைமுறைக்கு சாத்தியமற்றது, அரசியலமைப்பிற்கு விரோதமானது” என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை உள்நாட்டில் தாம் நியமிக்கவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்