அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு, செயற்கை சுவாச இயந்திரம் அன்பளிப்பு

🕔 December 16, 2017
– அகமட் எஸ். முகைடீன் –

ல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு செயற்கை சுவாச இயந்திரம் (வென்டிலேடர்) இன்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

மெஸ்ரோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தவிசாளரும் டுபாய் அட்லாண்டிக் லுப்ரிகன்ட் நிறுவனத்தின் தலைவருமான சேக் நாசிம் அஹமட் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 25 லட்சத்தி 75 ஆயிரம் ரூபா பெறுமதியான குறித்த செயற்கை சுவாச இயந்திரத்தை வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்தார்.

வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எம். றகுமான் தலைமையில், நடைபெற்ற இந் நிகழ்வில் மெஸ்ரோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். நசீல், அந்நிறுவனத்தின் இணைப்பாளர் எம். ஜின்னா, சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் ஏ.டபள்யூ.எம். சமீம், ரேடியோலஜிஸ்ட் டொக்டர் ஐனுல் ஹிதாயா மற்றும் டொக்டர் ஏ.எல். பாறூக், உட்பட, அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு வரையிலான மக்கள் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சில சந்தர்ப்பங்களில் தெஹியத்த கண்டி மற்றும் மகியங்கண பிரதேசத்திலிருந்தும் சிகிச்சை பெறுவதற்காக இங்கு மக்கள் வருகின்றனர். இப்பிரதேசத்தில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவைக் கொண்ட ஒரே ஒரு வைத்தியசாலையாக இவ்வைத்தியசாலை காணப்படுவதனால் அதிகளவிலான மக்கள் சிகிச்சை பெறுவதற்காக இங்கு வருகின்றனர்.

இருந்தபோதிலும் இவ்வாறான செயற்கை சுவாச இயந்திரம் பற்றாக்குறையாக காணப்பட்டதனால் அதிகளவிலான நோயளிகளுக்கு ஒரே தடவையில் சிகிச்சையளிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

தற்போது இவ்வியந்திரம் கிடைக்கப் பெற்றமையினால் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்