டிசம்பர் 21 அல்லது அடுத்து வரும் நாட்களில் தேர்தல் தினம் அறிவிக்கப்படும்: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்

🕔 December 16, 2017

ஞ்சியுள்ள 248 உள்ளுராட்சி  மன்றங்களுக்குமான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் இறுதித் தினத்தில், அல்லது அதற்கு அடுத்து வரும் தினங்களில், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் தினம் அறிவிக்கப்படும் என்று, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட் தெரிவித்துள்ளார்.

நாளை மறுதினம் 18ஆம் திகதி மேற்படி உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகி, 21ஆம் திகதி நண்பகல் 12.00 மணியுடன் நிறைவு பெறவுள்ளது.

ஏற்கனவே, 93 உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை 14ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்