சுய மரியாதை இருந்தால் ராஜிநாமா செய்ய வேண்டும்; நீதியமைச்சர் குறித்து, பொன்சேகா விசனம்

🕔 August 21, 2017

நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு சுய மரியாதை இருக்குமாயின், அவர் தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமென்று, பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஏற்கனவே, அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் நடத்தைகள் தொடர்பில் , ஐ.தே.கட்சியின் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. எனவே, அவர் தனது பதவிலிருந்து உடனடியாக விலக வேண்டும் எனவும் அவர் கூறினார்.

நேற்று முன்தினம் களனியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் சரத் பொன்சேகா விடம் ஊடகவியலாளர்கள் முன் வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கூறுகையில்; மோசடிப் பேர்வழிகளை கைது செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு, விஜேதாஸ ராஜபக்ஷ முட்டுக் கட்டையாக இருக்கின்றார் என்றார்.

அவர் ராஜிநாமா செய்வாராயின் செயற்பாடுகள் விரைவுபடுத்தப்படும் எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்