தாஜுதீன் எலும்புகள் காணாமல் போன விவகாரம்: வைத்திய அதிகாரியின் மருத்துவ சான்றிதழுக்குத் தடை

🕔 July 1, 2017

யர் நீதிமன்ற முன்னாள் வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவின் மருத்துவ சான்றிதழ், 06 மாத காலத்துக்கு தடை செய்யப்படுவததாக, இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.

படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீன் எலும்புகள்காணாமல் போனமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணைகளில், கொழும்பு முன்னாள் உயர் நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளமையினை அடுத்து, இலங்கை மருத்துவ சபை மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ் விவகாரம் தொடர்பில் தாம் மேற்கொண்ட நீண்ட விசாரணைகளின் பின்னர், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, இலங்கை மருத்துவ சபை சுட்டிக் காட்டியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்