மின் கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக் கோரி சஜித் மனுத்தாக்கல்
தற்போதைய மின் கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச – உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, மின்சரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான தரவுகள், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், பெப்ரவரி மாதம் மின் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மின்சக்தி ராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.