காதலித்து ஏமாற்றிய மாணவியின் நிர்வாண வீடியோவை, சமூக ஊடகத்தில் வெளியிட்டவருக்கு 14 நாட்கள் விளக்க மறியல்
– பாறுக் ஷிஹான் –
பாடசாலை மாணவியின் நிர்வாணப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான காதலர் என கூறப்படும் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
நற்பிட்டிமுனை பகுதியை சேர்ந்த தனது மகளின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து – கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவில் கடந்த புதன்கிழமை (22) முறைப்பாடு ஒன்று பதிவானது.
கல்முனை மாநகர சபை பெண் உறுப்பினர் ஒருவர் இந்த முறைப்பாட்டை செய்திருந்தார்.
இதற்கமைய செயற்பட்ட பொலிஸார், குறித்த பாடசாலை மாணவியை காதலிப்பதாக சந்தேகிக்கப்படும் திருக்கோவில் பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை மாணவியின் ஒத்துழைப்புடன் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணையின் பின்னர் கைது செய்தனர்.
இதன் போது நடந்த விசாரணையில், 2 வருடங்களாக காதலித்து பின்னர் அந்த இளைஞனை குறித்த மாணவி ஏமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர்கள் காதலித்த கால கட்டத்தில் – பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து, குறித்த மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதுடன் – அதனை வீடியோவாகவும் மேற்படி இளைஞர் தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் இவர்களின் காதல் இடைநடுவில் மாணவியின் பெற்றோரின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.
இதனால் குறித்த இளைஞன் விரக்தியுற்று மாணவியின் பெற்றொருக்கு பல்வேறு அழுத்தங்களை தொலைபேசி ஊடாக வழங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் திடிரென சமூக வலைத்தளங்களில் அம்மாணவியுடன் காதல் தொடர்பில் இருந்த காலங்களில் எடுக்கப்பட்ட பாலியல் துஸ்பிரயோக காட்சிகள் – ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி இருந்தன.
இதனை அடுத்து அம்மாணவியின் தாயார் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய செயற்பட்ட பொலிஸார் – குறித்த இளைஞனை கைது செய்து நேற்று வியாழக்கிழமை (23) கல்முனை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அ
இதன்போது எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி வரை 14 நாட்கள் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இவ்விடயம் தொடர்பில் – பொலிஸ் தகவல் தொழிநுட்ப பிரிவினருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.