பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது: நிர்வாண வீடியோ அதிபரின் கைப்பேசிக்கும் வந்து சேர்ந்தது
பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 20 வயது இளைஞனை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நேற்று (24) கைது செய்துள்ளது.
குறித்த மாணவியின் நிர்வாண வீடியோகளை சந்தேக நபர் – பல நபர்களுடன் வாட்ஸாப்பில் பகிர்நதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மொரவக்க பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் சிறுமியின் வீட்டில் அவரை 11 தடவை பாலியல் புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார் என, பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சிறுமியின் பெற்றோர் வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், சந்தேக நபர் வந்து அவளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதோடு, தனது கைத்தொலைபேசியில் அதனைப் பதிவு செய்ததாகவும் விசாரணை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பின்னர் அந்த வீடியோவை சந்தேக நபர் வாட்ஸாப் மூலம் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பாடசாலை அதிபரின் தொலைபேசிக்கும் அந்த வீடியோ வந்துள்ளது,
பாதிக்கப்பட்ட சிறுமியை சிறுவர் இல்லத்திற்கு – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அனுப்பிவைத்துள்ளது. அதேவேளை சந்தேக நபரை மொரவக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.