சீனாவின் 1000 மெற்றிக் தொன் நன்கொடை அரிசி இலங்கை வந்தது: விரைவில் பாடசாலைகளுக்கு விநியோகம்
சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 1000 மெற்றிக் தொன் அரிசி இன்று (19) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
100,000 பொதிகளில் வந்துள்ள இந்த அரிசித் தொகை, நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த விநியோகம் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
கடந்த ஜூன் மாதம் முதல் மொத்தம் 7000 மெட்ரிக் தொன் அரிசி இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.