துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்
துறைமுக அதிகார சபையின் புதிய தலைவர் இன்று (25) காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கீத் டி. பெர்னார்ட், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் நியமிக்கப்பட்டார்.
முன்னர் கலாநிதி பிரசாந்த ஜயமன்ன – துறைமுக அதிகார சபையின் தலைவராகப் பதவி வகித்தார்.
கலாநிதி பிரசாந்த ஜயமன்ன, துறைமுக அதிகார சபையின் தலைவராக கடந்த ஜனவரி மாதம் 19ஆம் திகதி – அப்போதைய துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தனவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.