கோட்டா மற்றும் பொன்சேகாவுக்கு அமெரிக்கா தடை

🕔 December 15, 2015
Gotta+Fonseka - 087
மு
ன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோருக்கு அமெரிக்காவினுள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இது தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா செல்வற்கான வீசாவுக்கு அண்மையில் விண்ணப்பித்திருந்த சரத் பொன்சேகாவின் வீசா விண்ணப்பம், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் நிராகரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சரத் பொன்சேகாவின் பெயர் தொடர்பு படுத்தப்பட்டுள்ளமை காரணமாகவே, அவரின் வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சரத் பொன்சேகாவின் மூத்த மகள் அப்சரா – அமெரிக்காவில் திருமணம் முடித்து வாழ்ந்து வரும் நிலையில், அவரைப்பார்த்து வருவதற்காகவே பொன்சேகா வீசாவிற்கு விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் போர்க்குற்றங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவருக்கும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

அத்துடன் அவரின் ‘கிரீன் கார்ட்’ வதிவிட அனுமதி ரத்துச் செய்யப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்