அட்டாளைச்சேனையில் சிறுமியைக் கடத்தியவர், புத்தளத்தில் கைது

🕔 January 17, 2022

ட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14 வயது சிறுமியொருவரைக் கடத்திச் சென்ற நபர், புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட சிறுமியும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 09ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக, அவரின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

கடத்தியவரையும் சிறுமியையும் பெற்றோர் தேடி வந்த நிலையில், புத்தளம் பிரதேசத்தில் வைத்து, இன்று (17) கடத்தியவரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, சிறுமியையும் மீட்டுள்ளனர்.

தற்போது அவர்கள் புத்தளம் – நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அக்கரைப்பற்று பொலிஸார் அவர்களை பொறுப்பேற்கவுள்ளனர் எனவும் சிறுமியின் தந்தை கூறினார்.

குறித்த கடத்தலுடன் உள்ளுர் அரசியல்வாதியொருவர் தொடர்புபட்டுள்ளதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனையில் 14 வயது சிறுமி கடத்தல்; பின்னணியில் உள்ளுர் அரசியல்வாதி: பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என பெற்றோர் விசனம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்