அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக றபீக் நியமனம்

🕔 December 15, 2021

ட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான புதிய உறுப்பினராக அட்டாளைச்சேனை தைக்கா நகரைச் சேர்ந்த ஐ.எல்.எம். றபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (14) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தேர்தல் அதிகாரி எம்.டப்ளியு.எம். சுபியான் இதனை அறிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான உறுப்பினராகப் பதவி வகித்த சின்னப்பாலமுனையைச் சேர்ந்த எச்.எம். சிறாஜ் – தனது பதவியை ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, மேற்படி றபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலம், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மக்கள் காங்கிரஸ் உறுப்பினராகப் பதவி வகித்த, அச்சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக, அவரின் பதவியை ராஜிநாமா செய்து, அதனை சின்னப் பாலமுனையைச் சேர்ந்த சிறாஜுக்கு வழங்கினார்.

தற்போது சிறாஜ் தனது உறுப்புரிமையை துறந்து, அதனை அட்டாளைச்சேனையைச் சேர்ந்த றபீக் என்பவருக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்