நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்குமாறு, அரசாங்கத்தின் பங்காளிகள் ஜனாதிபதிக்கு கடிதம்

🕔 August 19, 2021

மூன்று வாரங்களுக்கு குறைந்தது நாட்டை முடக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகள் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.

குறைந்தபட்டம் மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்காமல் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்தியசாலைகளினால் தாங்க முடியும் அளவுக்கு குறைக்க முடியாது என்று நம்புவதாகவும் அவர்கள் அந் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

நமது மக்கள் சக்தி தலைவர் அதுரலியே ரத்ன தேரர், இடசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய தேசிய மக்கள் கட்சித் தலைவர் டிரான் அலஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டொக்டர் ஜி. வீரசிங்க, இலங்கை மக்கள் கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன மற்றும் கடமைகளுக்கான தேசிய அமைப்பின் தலைவர் கெவிது குமாரதுங்க மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்