பொதுச் சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய நபர் கைது

🕔 August 4, 2021

பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது எச்சில் துப்பி, அவரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய 48 வயதுடைய நபர் ஒருவர் கிரிஉல்ல – புஸ்குலதெனிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொவிட் பாதிப்புக்குள்ளான சந்தேக நபரின் மகனுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அவரின் வீட்டுக்கு குறித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வந்துள்ளார்.

இதன்போதே, குறித்த பொதுச் சுகாதார பரிசோதகர் மீது சந்தேக நபர் எச்சில் துப்பியுள்ளதோடு, அவரின் கடமைக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, சந்தேக நபரைக் கைது செய்துள்ள கிரிஉல்ல பொலிஸார், அவரை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக் எடுத்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்