தொழிற் பயிற்சி அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளராக ஜாபீர் நியமனம்

🕔 June 29, 2021

– யூ.கே. காலித்தீன் –

லங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றி வரும் ஆதம்பாவா அப்துல் ஜாபீர், கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான (கடமை நிறைவேற்று) பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்துக்கு முதன்முதலாக இப்பதவிக்கு நியமிக்கப்படும் அதிகாரியும் இவராவார்.

2010ம் ஆண்டு இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையில் உதவிப் பணிப்பாளராக இணைந்து கொண்ட ஜாபீர் ,பின்னா் 2020ம் ஆண்டு பிரதிப் பணிப்பாளராக பதவியுயா்வு பெற்றார்.

இதுவரை மேற்படி அதிகாரசபையின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும், தலைமை அலுவலகத்திலும் கடமையாற்றியுள்ள இவர், தற்போது அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளராக பணிபுரிகின்ற நிலையிலேயே தற்போதைய கடமைக்கு மேலதிகமாக மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.ஏ. ஜாபீர், பேராதனை பல்கலைக்கழக விவசாய விஞ்ஞான பட்டதாரியாவர். அத்துடன் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் முகாமைத்துவ பட்டப்பின் கற்கை நிறுவனத்தில் பொது நிர்வாகத் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்