ரஞ்சனின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

🕔 March 22, 2021

ஞ்சன் ராமநாயக்கவின் தண்டனையை மீள்பரிசீலனை செய்யக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கான தீர்ப்பினை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி அவரது சட்டத்தரணிகளால் இந்த மனு தாக்கல் செய்யப் பட்டிருந்தது.

குறித்த மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நிராகரிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

நீதித்துறை அவமதிப்புக் குற்றத்துக்காக, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்