மைத்திரியை அழைத்து, பாடசாலைக் கட்டடத்தை திறந்து வைத்த கோட்டா: பொலநறுவையில் சம்பவம்

🕔 January 17, 2021

பொலநறுவையில் பாடசாலைக் கட்டடம் ஒன்றினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவை அழைத்து, குறித்த கட்டடத்தை திறந்து வைத்தார்.

பொலனறுவை – மெதிரிகிரியவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

பாடசாலையொன்றில் கட்டடமொன்றை திறந்துவைக்கும் நிகழ்வில்கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவை நோக்கி திரும்பி; “இது கட்டப்படுவதற்கு காரணமாக இருந்தவரே இதனை திறந்துவைக்க வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, அந்தக் கட்டடத்தை திறந்துவைத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்