தம்மிக பண்டாரவின் ‘பாணி மருந்து’ குடித்தவருக்கு கொரோனா தொற்று உறுதி

🕔 December 28, 2020

கொவிட் நோய்க்கான மருந்து எனக் கூறி, தம்மிக பண்டார எனும் நாட்டு வைத்தியரால் தயாரிக்கப்பட்ட பாணியை உட்கொண்ட ஒருவர் – கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வறக்காபொல பகுதியில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக, அப் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் ஹேமந்த குமாரா தெரிவித்துள்ளார்.

மேற்படி பாணி மருந்தை தயாரித்த தம்மிக பண்டாராவின் சொந்த ஊர் அமைந்துள்ள கேகாலை மாவட்டத்திலேயே, அவரின் மருந்தை அருந்தியவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

தனது மருந்தை உட்கொண்டவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருபோதும் கொவிட் 19 நோயால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று தம்மிக பண்டார கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, சுதேச மருத்துவ அமைச்சர் சிசிர ஜெயகோடி மற்றும் சபாநாயகர் மஹிந்தா யாப்பா அபேவர்தனஉள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய நபர்கள், தம்மிக பண்டாரவின் மருந்தை பகிரங்கமாக உட்கொண்டனர்.

தொடர்பான செய்தி: நாட்டு வைத்தியர் தம்மிகவின் கொரோனா மருந்து; பெற்றுக் கொள்ள பெரும் நெரிசல்: பொலிஸாரும் வாங்கிச் சென்றனர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்