அபகீர்த்தி ஏற்படுத்தும் பேஸ்புக் பதிவு; அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

🕔 August 21, 2020

– அஹமட் –

னது நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் ‘பேஸ்புக்’ பக்கம் ஒன்றில் எழுதப்பட்டமைக்கு எதிராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் கே.எம். முனவ்வர் என்பவர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

‘தவமணி’ எனும் பெயரில் உருவாக்கப்பட்ட பேஸ்புக் கணக்கில், மேற்படி முனவ்வர் என்பவர் குறித்து – மூன்று நாட்களுக்கு முன்னர் பொய்யான தகவல் ஒன்று எழுதப்பட்டிருந்ததோடு, அதனை சிலர் பகிர்ந்தும் இருந்தனர்.

முனவ்வர் என்பவரின் இடத்தில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு, உரிய பணத்தை மேற்படி முனவ்வர் என்பவர் வழங்கவில்லை என்று, சம்பவத்துடன் தொடர்புபட்ட கட்டட நிர்மாணப் பணியாளர் ஒருவர் எழுதுவது போன்று, மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, குறித்த ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவொன்று இடப்பட்டிருந்தது.

ஆனால், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை எனக் கூறியுள்ள பாதிக்கப்பட்ட பிரபல வர்த்தகர் முனவ்வர்; தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதோடு, சமூகத்தில் தனது மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்த வேண்டும் எனும் மோசமான எண்ணத்துடன், இந்த ‘பேஸ்புக்’ பதிவு இடப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அந்த ‘பேஸ்புக்’ கணக்கு மற்றும் அதில் எழுதப்பட்டுள்ள விடயங்களுக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, தனது சட்டத்தரணிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாக, இது தொடர்பில் இணையக் குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவின் கொழும்பு அலுவலகத்தில் முறையிடவுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்