வாக்குச் சீட்டை படம் எடுத்தவர் கைது

🕔 August 5, 2020

வாக்குச் சீட்டில் அடையாளம் இட்டதன் பின்னர் அதனை கைப்பேசியில் படம் எடுத்த ஒருவரை, நாவலபிட்டி பொலிஸார் இன்று கைது செய்தனர்.

நாவலப்பிட்டி – ஒம்புல்பிட்டிய எனும் இடத்தில் வசிக்கும் 32 வயதான நபர், இன்று காலை நாவலபிட்டிய மத்திய கல்லூரியில் வாக்களிக்கும் போது, தனது வாக்குச் சீட்டில் அடையாளம் இட்டதன் பின்னர் அதனை படம் எடுத்தார்.

இதனையடுத்து வாக்களிப்பு நிலைய சிரேஷ்ட தேர்தல் அதிகாரி – சந்தேக நபரை தடுத்து வைத்ததோடு, அவருடைய கைத்தொலைபேசியையும் கைப்பற்றினார்.

பின்னர் அப்பகுதியில் நடமாடும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டார்.

இதேவேளை, ரம்பொட – ஹெல்பொட நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்படுவார் என, நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்