நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதி, நாளை அறிவிக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

🕔 June 2, 2020

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முடிவு நாளை புதன்கிழமை அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த விவகாரம் குறித்து கலந்துரையாட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நாளை கூடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை சவாலுக்குட்படுத்தும் அடிப்படை உரிமைகள் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில்லை என, இன்று உச்ச நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 25 அன்று நடைபெறவிருந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து ஜூன் 20 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆயினும், ஜுன் 20ஆம் திகதியும் தேர்தல் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்