கொரோனாவினால் மரணிப்போருக்கு, அவரவர் மத முறைப்படி இறுதிக் கிரியைகள் செய்ய வேண்டும்: கல்முனை மாநகர சபையில் தீர்மானம்

🕔 May 21, 2020

பாறுக் ஷிஹான்

கொரோனாவினால் மரணமடைந்தவர்களுக்கு அவரவர் மத முறைப்படி  இறுதிக் கிரியைக் செய்ய அரசாங்கம் அனுமதிக்குமாறு கோரி  கல்முனை மாநகர  சபையில் இன்று வியாழக்கிழமை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை சுயேட்சை உறுப்பினர் ஏ.ஆர். எம். அஸீம், இதற்கான பிரேரணையை முன்வைத்தார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு   இன்று வியாழக்கிழமை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது சபையின் இறுதி கட்ட நிகழ்வில் திடிரென எழுந்த கல்முனை மாநகர சபை சுயேட்சை  உறுப்பினர் ஏ.ஆர். எம். அஸீம் குறித் பிரேரணையை முன்வைத் உரையாற்றினார்.

அதன்பொது அவர் தெரிவிக்கையில்;

“கடந்த காலங்களில் இலங்கையில் கொரோனா வைரஸ் அனர்த்தங்களினால் மரணமடைந்தவர்களின் சடலங்கள்  அவரவர் மத உரிமையை மீறி  நல்லடக்கம் செய்யப்படாமல்  எரிப்பதை இட்டு மனவேதனை அடைகிறோம். அதுபோலவே ஏனைய சக உறுப்பினர்களும்  கவலைப்படுகின்றனர்.

கொவிட் 19 தொற்றால் மரணமடைந்தவர்களை அவரவர் மதப்படி அடக்கம் செய்ய அரசாங்கத்திடம் வேண்டிய விஷேட பிரரேணையை சபையில் கெளரவ உறுப்பினர்களின் சம்மதத்துடன் நிறைவேற்றுமாறு விஷேட பிரரேணையை  தற்போது முன் வைக்கின்றேன்.

எனவே  இன மத கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சக உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டும்” என்றார்.

இதனையடுத்து மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் குறித்த தீர்மானத்தை ஆமோதித்து  சக உறுப்பினர்கள் ஏகமனதாக நிறைவேற்றினர்.

அத்துடன் நிறைவேற்றப்பட்ட குறித்த  தீர்மானத்தினை நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாக மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் சபையில் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்