சஹ்ரான் சென்று போதனை செய்த அலுவலகங்களுக்கு ‘சீல்’ வைப்பு
ஈஸ்டர் தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான பயங்கரவாதி சஹ்ரான் காசிம் – போதனை நிகழ்த்தியதாகக் கூறப்படும் கற்பிட்டி பகுதியிலுள்ள இரண்டு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு தரப்பினர் ‘சீல்’ வைத்துள்ளனர்.
கற்பிட்டியிலுள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கு பயங்கரவாதி சஹ்ரானை அழைத்து, அந்த நிறுவத்திலுள்ள இளைஞர்களுக்கு அடிப்படைவாத போதனை நிகழ்த்தியமை மற்றும் ஆயுத பயிற்சி வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், அந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, சம்பந்தப்பட்ட அரச சார்பற்ற நிறுவனத்தின் இரண்டு அலுவலகங்களுக்கு இன்றைய தினம் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.