வெலிசர கடற்படை வைத்தியசாலையில் உயிரிழந்த அதிகாரிக்கு எலிக் காய்ச்சல்; கொரோனா இல்லை: அறிக்கையில் தெரிவிப்பு

🕔 April 26, 2020

வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்த கடற்படை இளம் அதிகாரி, எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார் என, கடற்படை தெரிவித்துள்ளது.

ஆயினும், இந்த அதிகாரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்தன.

இந்த நிலையில், இவரின் மரணம் தொடர்பில் கடற்படை அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையிலேயே, குறித்த அதிகாரி எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டள்ளது.

வெலிசர கடற்படை முகாமினுடைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, சட்ட வைத்திய அதிகாரியின் உத்தரவின் படி, கோவிட் 19 இறப்புகளுக்கான நடைமுறைகளை பின்பற்றி அவரது இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்றும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்