வீதிகளில் பயணிப்போர் முகக் கவசம் அணிய வேண்டும்: கட்டாயமாக்கியது பொலிஸ்

🕔 April 11, 2020

வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்று தொடக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணியாமல் வீதிகளில் பயணிப்பவர்களை, திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் கொரோனா தொற்று பரவியமையை அடுத்து, நாட்டில் முகக் கவசங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தரம் குறைந்த முகக் கவசங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் உள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்