ஊரடங்குச் சட்டம்: 16 மாவட்டங்களில் நாளை காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்டு, மீண்டும் பகல் 12 மணிக்கு அமுலுக்கு வருகிறது

🕔 March 25, 2020

ட மாகாணம், மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய பதிகளில் நாளை காலை 6.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் நாளை மதியம் 12.00 மணிக்கு மீண்டும் அந்தப் பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுலுக்கு வரும்.

அதேவேளை மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும்.

புத்தளம் மாவட்டத்திலும், வட மாகாணத்தின் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 6:00 மணிக்கு நீக்கப்பட்டு, மீண்டும், அதே தினம் மதியம் 12:00 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

இதேவேளை ஒரு மாவட்டத்தை விட்டு அடுத்த மாவட்டத்திற்கு எவரும் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை எங்கும் அழைத்துச் செல்லுதலும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நேரங்களிலும் விவசாயிகள், சிறு தேயிலை தோட்ட மற்றும் ஏற்றுமதி உப உணவுப் பயிர் விவசாயிகள், தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊடக சேவைகளுக்கும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் போக்குவரத்திற்கும் ஊரடங்கு வேளையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்