அம்பாறை மாவட்ட தேர்தல் களம்: வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர்

🕔 March 18, 2020

– முன்ஸிப் –

டைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், நேற்றிரவு கையொப்பம் இட்டார்.

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எல்.எம். நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸுக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் இறுதி இரண்டு வருடங்களை, கடந்த முறை இவர் வகித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் இவருக்குக் கிடைத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்