நாடு முழுவதும் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள்: 10 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

🕔 February 18, 2020

நாடு முழுவதும் சுமார் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளனர் என்றுஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவர்கள் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வாறான போலி வைத்தியர்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்தள்ளார்.

ஆகவே போலி வைத்தியர்களை இனங்கண்டு தண்டிப்பதற்காக, நடைமுறையில் உள்ள சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாகவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்