பொதுத் தேர்தலில் மைத்திரி போட்டியிடுவார்

🕔 January 18, 2020

திர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த தகவலை வெளியிட்டார்.

அத்துடன் இம்முறை சகல மாவட்டங்களிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் களமிறங்குவார்களென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்