ஊடகவியலாளர் முஷர்ரப், சடத்தரணியாக சத்தியப்பிரமாணம்

🕔 August 8, 2019

– சப்னி அஹமட் –

புகழ்பெற்ற ஊடகவியலாளர் முஷர்ரப் முதுபின், உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இன்றைய சத்தியப்பிரமாணம் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான  றிஷாத் பதியுதீனும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

முஷ்ஷரப் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘வசந்தம்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘அதிர்வு’ எனும் அரசியல் விவாத நேரடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம், வெகுவாக அறியப்பட்ட முஷர்ரப், பொத்துவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்