தோட்டா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான, ஊடகப் பணிப்பாளர் விடுதலை
துப்பாக்கிக்குரிய தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மொஹமட் அலி ஹசன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
இரண்டு வீடுகளை இணைக்கும் கூரைப் பகுதியில் இந்த தோட்டாக்கள் வைக்கப்பட்டிருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்தத் தோட்டாக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் அவர் அறிந்திருந்தாரா என்கிற சந்தேகம் நிலவுவதாகவும் பொலிஸார் தெரிவுத்துள்ளனர்.
இந்த நிலையிலேயே விசாரணைகளின் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தொடர்பான செய்தி: நிதியமமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கைது