ஊர் திரும்பினார் உதுமாலெப்பை; முக்கிய ஆதரவாளர்களுடன் நாளை சந்திப்பு

🕔 September 23, 2018

– அஹமட் –

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தனது சொந்த ஊரான அட்டாளைச்சேனையிலுள்ள முக்கிய அரசியல் ஆதரவாளர்களை, நாளை திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது.

தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் பதவி மற்றும் முக்கிய பொறுப்புக்களிலிருந்து உதுமாலெப்பை ராஜிநாமா செய்துள்ளமையினை தொடர்ந்து எழுந்துள்ள கொதிநிலையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

கொழும்பில் இருந்தவாறு தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை ராஜிநாமா செய்த உதுமாலெப்பை, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தனது சொந்த ஊரான அட்டாளைச்சேனை திரும்பினார்.

இதனையடுத்து உதுமாலெப்பையை அவரின் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாகச் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனது சொந்த ஊரிலுள்ள முக்கிய ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசிய பின்னரே, கட்சியின் தலைவர் அதாஉல்லாவை உமாலெப்பை சந்திக்கவுள்ளார் எனத் தெரியவருகிறது.

உதுமாலெப்பை கொழும்பில் இருந்தபோது, அவரைச் சந்திப்பதற்காக தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா, தனக்கு நெருக்கமான பலரை அனுப்பி வைத்திருந்த போதிலும், அந்த முயற்சிகள் தோல்வியடைந்திருந்ததன.

அந்த காலப் பகுதியில் உதுமாலெப்பையின் கைத்தொலைபேசிகளும் இயக்கமற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்