சமையல் எரிவாயுவின் விலை, நள்ளிரவு அதிகரிக்கிறது

🕔 April 27, 2018

மையல் எரிவாயுவின் விலை இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

அந்த வகையில், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலின்டரின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை நுகர்வோர் அதிகார சபை வழங்கியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் கூறியுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த  விலை அதிகரிப்புக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய தற்போது 1431 ரூபாவாக விற்பனைச் செய்யப்படும் 12.5 கிலோ கிராம் சமயல் எரிவாயு சிலின்டர் ஒன்றின் புதிய விலை 1676 ரூபாவாக அதிகரிக்கும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்