அரசியல் கொதிநிலை குறித்து, நாடாளுமன்றில் இன்று மாலை விவாதம்

🕔 February 19, 2018
தேசிய அரசியலில் கொதிநிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அது குறித்து இன்று திங்கட்கிழமை மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது.
கட்சி தலைவர்கள் கூட்டத்தில், இன்றைய தினம் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
ஒன்றிணைந் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் தினேஷ் குணவர்தன, தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்கான வேண்டுகோள் ஒன்றை முன்வைத்திருந்தார்.

அந்த வேண்டுகோளை தொடர்ந்து சபையில் அசாதாரண நிலைமையொன்று ஏற்பட்டது. இதனையடுத்து நாடாளுமன்றம் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு, கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நடத்தப்பட்டது.

அக்கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டை தொடர்ந்தே மூன்று மணிநேரம் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்