பிரசாரக் கூட்டத்துக்கு சென்றவர்கள் மீது சோதனை கெடுபிடி; பொதுமக்கள் விசனம்

🕔 January 30, 2018
மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குச் சென்ற பொதுமக்கள், பொலிஸாரின்  தீவிர சோதனைக் கெடுபிடிக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை  புதுக்குடியிருப்பில் பதிவாகியுள்ளது.

மேற்படி கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுக்குடியிருப்பு ஐயன்கோவிலுக்கு அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்ற போதே, இந்த சோதனைக் கெடுபிடி இடம்பெற்றது.

பொதுமக்களில் குழந்தைகளுடன் சென்ற தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் உட்பட அனைவரும் தீவிர உடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இது குறித்து அங்கு சென்ற மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்