சம்மாந்துறையில் ஹெரோயின், கஞ்சாவுடன் ஒருவர் கைது; முக்கியஸ்தர்களுக்கும் தொடர்புள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

🕔 December 30, 2017

– ஏ.எல். நிப்றாஸ் –

ம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா ஆகியவைற்றுடன், நபர் ஒருவர் கைது செய்ய்பபட்டதாக, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அஸார் தெரிவித்தார்.

சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் உள்ள வீடொன்றிலிருந்து, 8340 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 450 கிராம் கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அபாயகரமான போதைப் பொருட்கள் விற்பனை செய்பப்டுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஸார் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, மேற்படி போதைப் பொருட்கள் சிக்கின.

இந்த போதைப் பொருள் வர்த்தகத்துடன் முக்கியஸ்தர்கள் சிலருக்கு தொடர்பிருக்கின்றமை ஆரம்ப கட்ட  விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும், அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஸார் மேலும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்