விமல் மற்றும் மனைவிக்கு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவையும், அவரின் மனைவியையும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விமல் வீரவன்சவை நாளை 12 ஆம் திகதியும், அவரின் மனைவி சஷி வீரவன்சவை – நாளை மறுதினம் 13 ஆம் திகதியும் ஆஜராகுமாறு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.