சாய்ந்தமருது கடற்கரையில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பெருநாள் தொழுகை
– எம்.வை. அமீர் –
சாய்ந்தமருது ஜாமியுல் இஸ்லாஹ் ஜும்மாப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில், புனித நோன்புப் பெருநாள் தொழுகை, சாய்ந்தமருது கடற்கரைத் திடலில் இன்று காலை இடம்பெற்றது.
மௌலவி ஏ.கலிலுர் ரகுமான் ஸலபி (அபூ ஹனான்), பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரசங்கத்தினை நடத்தினார்.
இதில், ஆண்கள்,பெண்கள் மற்றும் சிறுவர்கள் என – ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.