தாருஸ்ஸலாம்; மறைக்கப்பட்ட மர்மங்கள்: புத்தகம் உங்கள் பார்வைக்கு (பாகம் – 01)
தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள் எனும் நூல், மூன்று பாகங்களையும், முடிவுரையினையும், பின்னிணைப்புக்களையும் கொண்டுள்ளது.
அந்த வகையில், குறித்த நூலின் முதல் பாகத்தை வாசகர்களின் பார்வைக்காக வழங்குகின்றோம்.
அடுத்தடுத்த நாட்களில் மற்றைய பாகங்கள் பதிவேற்றப்படும்.
முஸ்லிம்களின் அரசியல் விடுதலைக்காகவென்று ஆரம்பிக்கப்பட்ட மு.காங்கிரஸ் கட்சியானது, இன்று அதன் தலைவரினதும், அவரின் வியாபாரப் பங்குதாரர்களினதும் தனிப்பட்ட சொத்தாக மாறிப்போய் விட்டதாக, நீண்ட நாளாகவே ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
மு.காங்கிரசுக்கு நிதியீட்டுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கம்பனி, நம்பிக்கை நிதியம், மற்றும் அந்தக் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாம் ஆகியவை, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் போன்றோரின் தனிப்பட்ட சொத்துக்களாகவும், அவர்களுக்கு பணம் உழைத்துக் கொடுக்கின்றவையாகவும் மாறி விட்டதாக சொல்லப்பட்டு வந்த குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதாக, தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள் எனும் நூல் அமைந்துள்ளது.
இந்த நூலானது வெறும் அரசியல் பிரசாரம் கொண்ட ஒன்றாகத் தெரியவில்லை என்று பலரும் கூறுகின்றனர்.
இதனை உருவாக்குவதற்கு கடுமையான உழைப்பும், அர்ப்பணிப்பும், பணமும் தியாகம் செய்யப்பட்டுள்ளன.
மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம் ஒரு வரலாற்று ஆவணமாகும்.
ஒரு சமூகத்துக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கைத் துரோகத்துக்கான சாட்சியாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.
இப்போதுள்ளவர்களுக்கு இந்தப் புத்தகத்திலுள்ள உண்மைகள் புலப்படாது விட்டாலும், அடுத்த சந்ததியாவது இதனைக் கையில் எடுத்துக் கொண்டு, தமது அரசியல் கட்சியை மீட்பதற்கான போராட்டமொன்றில் குதிக்கும் என்று, இந்தப் புத்தகத்திலுள்ள நியாயங்களை விளங்கிக் கொண்டவர்கள் கூறுகின்றனர்.
இனி புத்தகத்தை வாசியுங்கள்;