துவிச்சக்கர வண்டியோட்டிப் பார்த்த மு.கா. தலைவர்: கிண்ணியாவில் முசுப்பாத்தி

🕔 September 3, 2016

Hakeem - 002– முன்ஸிப் அஹமட் –

ழைகள் அநேகமாக வசதியான வாழ்க்கை மீது ஆசைப்படுவார்கள். நல்ல வீடு, நான்கு சக்கர வாகனங்கள் என்று, வசதியானவர்களைப் போல் – தாங்களும் ஒருநாள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்பது அவர்களின் ஆசையாகும்.

ஆனால், ஏழைகளின் வாக்குகளைப் பெற்று – அதில் சொகுசு வாழ்க்கையினை அனுபவிக்கும் அரசியல் தலைவர்களுக்கு, வறுமை வாழ்வும் அதன் வலியும் புரிவதில்லை.

கிண்ணியா பிரதேசத்துக்கு இன்று சனிக்கிழமை விஜயம் செய்திருந்த மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், அங்கு துவிச்சக்கர வண்டியினை ஓட்டிப் பார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த ஒருவரிடம், அவரின் துவிச்சக்கர வண்டியினைக் கேட்டு வாங்கி – ஹக்கீம் ஓட்டிப்பார்த்தார்.

தலைவர் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும் போது, சும்மா பார்த்துக் கொண்டிருப்பது பாவமில்லைதான். ஆனாலும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜே.எம். லாஹிர் உள்ளிட்ட பலர், தமது கட்சித் தலைவரைப் பின் தொடர்ந்து கால்நடையாக ஓடினார்கள்.

ஏழைகளின் வாழ்க்கை, வசதி படைத்தோருக்கு சற்று நேர முசுப்பாத்தியாகும்.Hakeem - 003

Comments

புதிது பேஸ்புக் பக்கம்