கொரோனோவை கட்டுப்படுத்தத் தவறினால், மில்லியன் கணக்கானோர் உயிரிழக்க நேரிடும்: ஐ.நா. செயலாளர் எச்சரிக்கை 0
வறிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறினால் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். காட்டுத்தீ போன்று கொரோனா வைரஸ் பரவக்கூடியதெனவும் அவர் கூறியுள்ளார். சர்வதேச ஒற்றுமை தார்மீகக் கடமை அல்லவெனவும் அது ஒவ்வொருவரினதும் சுயவிருப்பின் பேரில் கடைப்பிடிக்கப்பட வேண்டியதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.