நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கைக்கு முன்னாள் சபாநாயகர் ஆதரவு 0
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளவும் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கையினை, தான் ஆதரிப்பதாக, முன்னைய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில்; ‘பாராளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் உரிய நேரத்தில், நல்லெண்ணத்துடன் கோரியுள்ளன. கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் சபாநாயகர் என்ற வகையில், இக்கோரிக்கையை ஆதரிக்கிறேன். பாராளுமன்றம்