நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கைக்கு முன்னாள் சபாநாயகர் ஆதரவு

🕔 April 30, 2020

லைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளவும் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கையினை, தான் ஆதரிப்பதாக, முன்னைய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில்; ‘பாராளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் உரிய நேரத்தில், நல்லெண்ணத்துடன் கோரியுள்ளன. கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் சபாநாயகர் என்ற வகையில், இக்கோரிக்கையை ஆதரிக்கிறேன். பாராளுமன்றம் மீளக் கூட்டப்படுமாயின், அதன் சிறந்த செயற்பாட்டை உறுதிப்படுத்துவது சபாநாயகரின் பொறுப்பாகும்’ என, அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு, எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கையை, அரசாங்கம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்