அரச வங்கியொன்றில் கொள்ளை; சிசிரிவி சாதனங்களும் அபேஸ் 0
அரச வங்கிக் கிளையொன்றில் துப்பாக்கி முனையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மத்தேகொட பிரதேசத்திலுள்ள குறித்த வங்கிக் கிளைக்கு, கார் ஒன்றில், பிஸ்டல் உள்ளிட்ட துப்பாக்கிகளுடன் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கொள்ளையர்கள் வந்திறங்கியுள்ளனர். இதன்போது வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அவற்றின் பெறுமதி 10 மில்லியன் ரூபாய்