கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சைக் காலம் அறிவிப்பு 0
கிராம உத்தியோகத்தர்கள்களுக்குரிய 2,763 வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்த்தன இன்று (08) நாடாளுமன்றில் இதனைக் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்; “இலங்கையில் 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளன. ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கு ஒரு கிராம அதிகாரி வீதம் 14,022 பதவிகள் உள்ளன.