கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சைக் காலம் அறிவிப்பு

🕔 November 8, 2023

கிராம உத்தியோகத்தர்கள்களுக்குரிய 2,763 வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்த்தன இன்று (08) நாடாளுமன்றில் இதனைக் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்;

“இலங்கையில் 14,022 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளன. ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கு ஒரு கிராம அதிகாரி வீதம் 14,022 பதவிகள் உள்ளன.

30.06.2023 ஆம் திகதி அன்றைய நிலவரப்படி 2,763 கிராம அலுவலர் பணியிடங்கள் வெற்றிடங்களாக உள்ளன.

மேலும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வர்த்தமானி அறிவித்தலின்படி, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தமது விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரிகளுக்கு 2023 டிசம்பர் மாதம் பரீட்சையை நடத்தவுள்ளது.

முதல் வாரத்தில் பரீட்சை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்” என அவர் மேலும் தெரிவத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்