சமாதானக் கல்வியும், முரண்பாடுகளுக்கான தீர்வும்; பாடசாலைகளில் கற்பிப்பதற்கான யோசனை முன்வைப்பு 0
சமாதானக் கல்வியும், முரண்பாடுகளுக்கான தீர்வுகளும் என்கிற பாடத் திட்டமொன்றினை, பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இயங்கும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அலுவலகம் இந்த யோசனையினை முன்வைத்துள்ளது. பல இனத்தவர்களும், சமயங்களைப் பின்பற்றுவோரும் வாழுகின்ற இலங்கையில், இவ்வாறானதொரு பாடத்திட்டத்தினை அறிமுகம் செய்யும்போது, அவர்களிடத்தில்