கல்முனையை நான்காக பிரித்தல்; சம்பந்தன் அலுவலகத்தில் சந்திப்பு: எல்லை முன்மொழிவு ஆவணங்களும் பரிமாற்றம் 0
– அஷ்ரப் ஏ சமத் –கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தை நான்கு உள்ளுராட்சி மன்றங்களாகப் பிரிக்கும் போது, அவற்றுக்கான எல்லைகளை தீர்மானிப்பது தொடர்பிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை மாலை எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தனின் அலுவலகத்தில் நடைபெற்றது. கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தை நான்காக பிரிப்பதற்கு, ஏற்கனவே முஸ்லிம் மற்றும் தமிழர் தரப்பு தமது சம்மதத்தைத் தெரிவித்திருந்தது.